தேனி, நீலகிரி, சேலம், திருச்சி, அரியலூர் உட்பட 18 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு மழை.!
IMD Announce Next 3 Hrs Tamilnadu 18 Districts Rain 16 April 2021
தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமாரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருப்பூர் உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், " தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
17.4.2021 முதல் 19.4.2021 வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் " என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 3 மணிநேரத்திற்கு மிதமான மற்றும் கனமழை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, " தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமாரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், கரூர், அரியலூர் " ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
IMD Announce Next 3 Hrs Tamilnadu 18 Districts Rain 16 April 2021