சட்டவிரோத மணல் குவாரிகள்: அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, “நாட்டின் சொத்தாகும் கனிம வளங்களை பாதுகாப்பது அதிகாரிகளின் முக்கியக் கடமை. சட்டத்துக்கு விரோதமாக இயங்கும் மணல் குவாரிகள் மூலம் இந்த வளம் அநியாயமாக சுரண்டப்பட்டால், அது சமூகநலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தாக இருக்கலாம்” எனக் குறிப்பிட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காணப்படும் அனைத்து விதமான சட்டவிரோத குவாரிகளையும் அடையாளம் காண்ந்து, அவற்றைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவோர் மீது கண்டிப்பான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

illegal Sand Quarries Madurai HC order


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->