கள்ளக்காதல் வேண்டாம் என முடிவெடுத்த பெண்!! வயலில் தனியாக இருந்தபோது நடந்த கொடூரம்!!
illegal lover killed married girl
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள களரிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வெள்ளக்கண்ணு. கொத்தனாராக வேலை செய்து வந்த இவருக்கு சத்யா என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில் புலியூரை சேர்ந்த பூபதி என்பவருக்கும், சத்தியாவுக்கும் ,வயலில் புல் அறுக்க சென்றபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது . இதையடுத்து இருவரும் கடந்த ஒரு வருடமாக பழகி வந்துள்ளனர்.நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சத்தியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதனால் சத்தியாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.அதனை தொடர்ந்து சத்தியா, பூபதியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியா வயல்பகுதியில் புல் அறுத்து கொண்டிருந்ததை பார்த்த பூபதி, அரிவாளுடன் அங்கு சென்று சத்தியாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சத்தியா வலி தாங்க முடியாமல் அலறிய படியே கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் சத்தியாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை கண்ட பூபதி அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் அங்கிருந்தவர்கள் சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சந்தியாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சத்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பூபதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
illegal lover killed married girl