உறவுக்கு தடையாக இருந்த பச்சிளம் குழந்தை.. ஹெலோ ஆப் கள்ளகாதலால் அரங்கேறிய கொடூர கொலை.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் அரசமரத் தெரு பகுதியை சார்ந்தவர் ராமதாஸ் (வயது 30). இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த பத்தாம் தேதி எழிலரசி என்ற பெண்ணுடன், மனு என்ற குழந்தைகளுடனும் ராமதாஸ் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். 

இதன் பிறகு அங்குள்ள உத்திரிய மாதா தெருவில் இருக்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், குழந்தையின் உடலை மருத்துவமனை வளாகத்திலேயே போட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வேளாங்கண்ணி சர்ச் பகுதியில் ராமதாஸ் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனைவி எழிலரசி. இவருக்கும், ராமதாஸிற்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில், கடந்த மூன்று வருடத்திற்கு முன்னதாக ராஜேந்திரன் இறந்து போன நிலையில், எழிலரசி 5 வயது குழந்தையையும், மனு என்று இரண்டு வயது குழந்தையும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அழைத்துக்கொண்டு ராமதாசுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இடையே ஹெலோ மூலமாக பழக்கம் ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே ராமதாஸிற்கு திருமணமாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இருவரும் அடிக்கடி அலைபேசி மூலமாக பேசி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வரவே, சம்பவத்தன்றும் 5 வயது மூத்த குழந்தையை அவர் உறவினர் இல்லத்தில் விட்டு விட்டு, மனுவை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் விடுதியில் உல்லாசமாக இருக்கையில் குழந்தை இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறி ராமதாஸ் சரமாரியாக அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Illegal affair couple man killed baby


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->