கள்ளகாதலியுடன் உல்லாசமாக வாழ்வதற்கே மனைவியை கொன்றேன்.,கணவன் பரபரப்பு வாக்குமூலம்..!!
Husband's confession about killing his wife
கள்ளகாதலியுடன் இணைந்து வாழ்வதற்காக மனைவியை கொன்றேன் என கணவன் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி இருந்தார். சத்தியமூர்த்தி அந்த பகுதியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 25 தேதி திவ்யாவின் குளிர்பானத்தில் மயக்க மருத்து குடுத்து அவரை தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து தனிபடை அமைத்து தேடி வந்த நிலையில் தஞ்சாவூரில் அவர் கள்ளகாதலியுடன் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற தனிபடையினர் அவரை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. திவ்யாவின் உறவினர் பெண்ணான அர்ச்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது.
திவ்யா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. திவ்யாவை பிரிந்து வந்தால் சேர்ந்து வாழலாம் என அர்ச்சனாவும் சொல்லியுள்ளார்.
இதனை அடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்து அவரின் குளிர்பானத்தில் மயக்கமருத்து கலந்து அவரை எரித்து கொன்றதாகவும் சென்னை சென்று அர்ச்சனாவிடம் திவ்யாவை பிரிந்து வந்துவிட்டேன் இருவரும் சேர்ந்து வாழலாம் எனவும் கூறியுள்ளார்.
அதன் பின் தஞ்சாவூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அர்ச்சனாவுடன் குடும்பம் நடத்திய போது காவல்துறையினர் கைது செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
Husband's confession about killing his wife