சற்று நொடியில் மனைவி எடுத்த அவசர முடிவு முடிவால் நேர்ந்த பெரும் விபரீதம்! பெற்றோரை இழந்து தனியாக தவிக்கும் குழந்தைகள்!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் சூரியமணல் கிராமத்தில் வசித்து வந்தவர் சரவணன் .36 வயது    தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் மின் வாரியத்தில் உதவிபொறியாளராக  உள்ளார். இவரது  மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சரவணனுக்கும், அவரது மனைவி வனிதாவுக்கும் குடும்பத் தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அவற்றைப் போலவே நேற்றும் சரவணனுக்கும், வனிதாவுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

     இதனால் மனம் உடைந்த வனிதா தற்கொலை செய்து கொள்ள போவதாக வீட்டை விட்டு வெளியேறி, அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்துள்ளார். இதனை கண்ட சரவணன் அதிர்ச்சியடைந்து தனது மனைவியை காப்பாற்ற கிணத்தில் குதித்துள்ளார்.  

ஆனால் இருவருக்குமே நீச்சல் தெரியாத நிலையில் இருவரும் கிணற்றுக்குள்ளேயே உயிருக்கு போராடி தத்தெடுத்துள்ளனர். இந்த நிலையில்  சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர்களை  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி எடுத்த அவசர முடிவு முடிவால் நேர்ந்த விபரீதம்! பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband wife dead by fight with them


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->