திருமணமான ஒரே வாரத்தில் மனைவி உயிரிழப்பு.! சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


திருமணமான ஒரே வாரத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செவரபூண்டி பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த 9ஆம்் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்து தம்பதியினர் சந்தியாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதைடுத்து நேற்று முன்தினம் சந்தியா வீட்டின் அருகே குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சந்தியாவின் தந்தை கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி இறந்த துயரத்தில் இருந்த முருகன், விழுப்புரம் குண்டலம்பட்டி பகுதியில் அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in Villupuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->