மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் தற்கொலை - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அந்தோனியார்புரத்தை சேர்ந்தவர் பெயிண்டர் அந்தோணி ராஜ் (37). இவரது மனைவி ஆரோக்கியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அந்தோணிராஜிக்கு மது குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடையே தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் நேற்று மது அருந்திவிட்டு வந்த அந்தோணிராஜ் மனைவியிடையே தகராறு செய்ததால், ஆரோக்கியம்மாள் அப்பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்பு நேற்று இரவு ஆரோக்கியம்மாள் வீட்டிற்கு வந்தபோது, கதவு உள்புறம் தாமழ்ப்பால் போட்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்தோணி ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து அந்தோணிராஜை மீீட்டு சிகிச்சைக்காக சுங்குவார்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே அந்தோணிராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மப்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in tiruvallur district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->