திருவள்ளூர்: மனவேதனையடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை
Husband suicide in tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் மனவேதனையடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் குமரன் நகரை சேர்ந்தவர் அன்பரசன்(34). இவரது மனைவி அனுசியா. இந்நிலையில் அன்பரசன் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதனை அவரது மனைவி அனுசியா கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனம் உடைந்த அன்பரசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband suicide in tiruvallur