திருவள்ளூர்: மனவேதனையடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் மனவேதனையடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் குமரன் நகரை சேர்ந்தவர் அன்பரசன்(34). இவரது மனைவி அனுசியா. இந்நிலையில் அன்பரசன் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனை அவரது மனைவி அனுசியா கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனம் உடைந்த அன்பரசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in tiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->