மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை - Seithipunal
Seithipunal


மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் மனமுடைந்த கணவர் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆ.மருதப்பபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியதுரை(32). இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்றதால் இரண்டாவது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பெரிய துறைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது மனைவியும் பெரியதுரையுடன் கோபித்துக் கொண்டு சென்று விட்டார்.

இதனால் மன வேதனை அடைந்த பெரியதுரை வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து பெருதுரையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெரியதுரை உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in Tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->