மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மன வேதனை அடைந்த கணவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மன வேதனை அடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் தேனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் அசோகன் (33). இவரது மனைவி பாப்பாத்தி. இந்நிலையில் அசோகனுக்கு மது அருந்து பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து தகராறு முற்றிய நிலையில் அசோகனின் மனைவி பாப்பாத்தி கோபித்துக் கொண்டு, அருகிலிருந்த தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த அசோகன் வாழ்க்கையில் வேறுபடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் காவல்துறையினர், உயிரிழந்த அசோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து குன்னம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in Perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->