மதுபோதையில் வற்புறுத்திய கணவன்..மறுத்த மனைவி .! கத்தியை எடுத்து செய்த கொடூர காரியம்.!
husband suicide in kovai
கோவை மாவட்டத்தில் இருக்கும் கிணத்துக்கடவு பகுதியில் வசித்து வரும் சபரி ராஜ் என்பவர் கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு பரிமளம் என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் சபரிராஜின் உறவினர் ஒருவர் தங்களுடைய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வதற்கான அழைப்பிதழ் வழங்க சபரிராஜுக்கு போன் செய்து இருக்கின்றார். அந்த நேரத்தில் சபரிராஜ் மது அருந்திவிட்டு அதீத போதையாக இருந்து இருக்கின்றார். எனவே, தன்னுடைய மனைவியிடம் போனை கொடுத்து அவருடன் உறவினருடன் பேசும்படி தெரிவித்துள்ளார்.
அனால், பரிமளம் கணவரின் பேச்சை கேட்காமல் தான் பிறகு பேசுவதாக தெரிவிக்க, மதுபோதையில் இருந்த சபரிராஜ் தனது மனைவியோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். இந்த வாக்குவாதம் அதிகப்படியாக முற்ற ஆத்திரமடைந்த சபரிராஜ் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தன்னை தானே குத்திக் கொண்டுள்ளார்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் மிடைந்த அவரை உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.