மனைவி செய்த காரியத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவன்..!
husband suicide in house
திருநெல்வேலியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாசரேத் நகரில் வாழ்ந்து வருபவர் மாடசாமி என்பவருடைய மகன் டேனியல் (வயது 36) இவர் தனது குடும்பத்துடன் கோவை வந்து பொன்னே கவுண்டன் புதூர், அன்னூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருபவர். இதை தொடர்ந்து அவருக்கும் அவர் மனைவிக்கும் குடும்பத் தகராறு என்று தெரிகிறது.
இதை தொடர்ந்து, நேற்று இரவு முழுவதும் வீட்டில் சண்டையிட்டு கொண்டு, பின் மனைவி குழந்தையை தூக்கிக் கொண்டு அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக இருந்த, மன உளைச்சலில் டேனியல் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.