துக்கத்திற்கு சென்று திரும்பிய மனைவி.! வீட்டில் இருந்த கணவன் செய்த காரியத்தால் பேரதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


துக்க வீட்டிற்கு மனைவி சென்ற நேரத்தில், கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பெட்டதாபுரம் பாலன் நகரை சேர்ந்த ரவிக்குமார் (39) வெல்டிங் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். 

கடன் வாங்கிய ரவிக்குமார் அந்த கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். இதன் காரணமாக மிகவும் மனவேதனை அடைந்த அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். 

இந்த நிலையில் நேற்று தன்னுடைய உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு ரவிக்குமாரின் மனைவி சென்று இருக்கின்றார். வீட்டில் தனித்து இருந்த ரவிக்குமார் சோகமாக வலம் வந்துள்ளார்.  

துக்க நிகழ்சியில் கலந்துகொண்டு திரும்பிய அவரது மனைவிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வீட்டில் காத்திருந்துள்ளது. வீட்டில் ரவிக்குமார் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். 

இதை கண்ட அவரது மனைவி அலறியடித்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband suicide in home


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->