மது குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் கணவர் தற்கொலை.!
Husband suicide in Cuddalore
கடலூர் மாவட்டத்தில் மது குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் குருவி நத்தம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (65). இவரது மனைவி தேவகி. இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்ததால் சம்பவத்தன்று மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் இதற்கு மனைவி பணம் தர மறுத்ததால், நாகராஜ் மனைவியிடம் கோபித்துக் கொண்டு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதிக்கு சென்றுள்ளார். பின்பு அங்கிருந்த மோட்டார் கொட்டைகையில் நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தூக்கணாம்பாக்கம் போலீசார், உயிரிழந்த நாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband suicide in Cuddalore