கணவரிடம் மட்டும் காரியத்தை கூறிவிட்டு, கதையை முடித்த புதுப்பெண்.! அவசரப்பட்டுட்டியே மா.! - Seithipunal
Seithipunal


புதுமணப் பெண் ஒருவர் திருமணம் செய்த நான்கே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 

மதுரை அரசரடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நான்கு நாட்களுக்கு முன்பாக தவச்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கின்றார். புது மணப் பெண்ணான தவச்செல்வி கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். 

தவச்செல்வி பணிபுரிந்து வரும் இடத்தில் அதிக வேலை கொடுத்து மன அழுத்தம் தருவதாக தன்னுடைய கணவரிடம் தெரிவித்து இருக்கின்றார். அன்றாடம் கணவரிடம் புலம்பி வரும் நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். 

இதனை தொடர்ந்து ம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அது போலவே அவர் பணி செய்த இடத்திலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband sad about wife suicide in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->