தனிக்குடித்தனம் செல்ல நச்சரித்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீதம்..!
Husband kills wife Near Madurai
மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புது எல்லிஸ் நகரை சேர்ந்தவர் நாகவேல் இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே சுதா தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.
ஆனால், நாகவேல் தாய் தந்தையுடன் இருக்கவேண்டும் என்பதால் அதற்கு மறுத்துள்ளார் இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வந்த நாக வெளியிட தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே என் கழுத்தை பிடித்து இறுக்கி நிறுத்தியுள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக நாகவேல் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, சுதா அடிக்கடி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், குடும்பத்தில் மூத்தவர் என்பதால் நான் அதற்கு சம்மதிக்க வில்லை.
சம்பவத்தன்று அதேபோல தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்தேன். ஆனால் அவர் இறந்து போவார் என நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband kills wife Near Madurai