பணத்துக்காக மனைவியை கொன்ற குடிமகன்.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!
Husband kills His Wife Near Thiruvannamalai
பணத்துக்காக மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு திருமணமாகி கௌதமி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ராஜாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவருகிறார். இதுபற்றி அறிந்த கௌதமின் தாய் தனது மகள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக தான் சேர்த்து வைத்த பணத்தில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார்.
இதனை அறிந்த ராஜா தன்னிடம் அந்த மொத்த பணத்தையும் வருமாறு தருமாறு கூறி சண்டையிட்டு வந்துள்ளார். இதற்கு கௌதமி மறுக்கவே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்ற கௌதமி வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தினர் ராஜாவை கேட்கும்பொழுது குடும்ப தகராறு காரணமாக அவர் மாயமாகி விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நேற்று அவர் கரும்பு தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து, காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .
அப்போது ராஜா முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவியை கொலை செய்து கரும்பு தோட்டத்தில் வைத்து எரித்தை ஓப்புகொண்டார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்திற்காக மனைவியை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband kills His Wife Near Thiruvannamalai