தினமும் சண்டை.. மனைவியை குத்தி கொலை செய்த கணவன்..!
Husband kills His Wife In Virudhunagar
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன் காவல்துறையில் சரணடைந்தார்.
விருதுநகர் NGO காலணி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவதன்று கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கண்ணன் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன்பின், அவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். உடனடியாக அவரின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband kills His Wife In Virudhunagar