மனைவி மீது சந்தேகம்.. கணவன் துணிகரம்.. திருப்பத்தூர் அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மனைவி மீது சந்தேகப்பட்டு அடித்து கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் பகுதியை சேர்ந்த பெருமாள். இவருக்கு திருமணமாகி துர்கா தேவி  என்ற மனைவியும் கிருபாகரன் (15) யுவராஜ் (13)  என்ற இரு மகன்களும் உள்ளனர். பெருமாள் பெங்களூரில்  வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், ஆதியூரில் நடைபெற உள்ள திருவிழாவிற்காக பெருமாள் குடும்பத்தினருடன் அங்கே சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது கணவன மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பெருமாள் அங்கிருந்த கடப்பாரையால் மனைவியாய் தாக்கினார்.

இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையியனர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு  செய்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பெருமாள் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராற்றில் ஈடுப்படுவார் எனவும் சம்பவதன்று அதே போல ஏற்பட்ட தகராற்றில் அவரை கொலை செய்ததாகவும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband Kills His Wife In Thiruppaththur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->