திருவிழாவிற்கு சென்ற போது தகராறு... காதல் மனைவியை கொன்ற கணவன்...!
Husband kills his wife
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் தேவலாபுரத்தில் உள்ள நந்தினியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
திருவிழாவிற்கு சென்ற இடத்தில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அவர் துப்பட்டாவால் கழுத்தை நெறித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.