தம்பியுடன் உல்லாசமாக இருந்த மனைவி.! கண்டித்தும் திருந்தாததால் கணவரே எடுத்த அதிர்ச்சி முடிவு!!
husband killed wife for illegl affair with his brother
கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாளம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கோவிந்தராஜன் தம்பி சின்னசாமி. அவர் தனது பெற்றோருடன் கிட்டம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்தார்.இந்நிலையில் சின்னசாமிக்கும் கஸ்தூரிக்கும் இடையே தகாத தொடர்பு இருந்து வந்துள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கோவிந்தராஜனுக்கு தெரியவந்த நிலையில் அவர் இதுகுறித்து மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாத கஸ்தூரி தனது மைத்துனருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
இதனால் கோவிந்தராஜ் மற்றும் கஸ்தூரிக்கு இடையே நேற்று இரவு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்பொழுது கஸ்தூரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் கஸ்தூரி துடிதுடிப்பதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவஇடத்திற்கு விரைந்த போலீசார் கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரிடம் கோவிந்தராஜ் தானே சென்று சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
husband killed wife for illegl affair with his brother