கை, கால்கள் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நடிகை! கொலையாளி கணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 21ஆம் தேதி, சென்னை பெருங்குடி குப்பைமேட்டில் வெட்டப்பட்ட நிலையில் இரண்டு கால்கள், ஒரு கை கொண்ட சாக்குப்பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் போலீசார்கள் இது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில், போலீசார் வெட்டப்பட்ட கை கால்கள் அடங்கிய புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை மக்கள் மத்தியிலும், தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா எனவும், அவர் ஒரு துணைநடிகை என்பதும் தெரியவந்தது. மேலும் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் அவரது கணவர் எஸ்.ஆர் பாலகிருஷ்ணனே வெட்டி கொலை செய்தார் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கணவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, 

எனது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம். எனக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மோகம் அதிகம். இந்நிலையில் எனக்கும்,சந்தியாவுக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.மேலும் எங்களுக்கு மாயவர்மன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர். மேலும் நான் 4 ஆண்டுகளுக்கு முன் ‘காதல் இலவசம்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்தேன்.

இந்நிலையில் சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அதை நான் விரும்பாததால்,எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சந்தியா, என்னுடன் வாழ விருப்பம் இல்லை என விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். 

அதனை தொடர்ந்து சந்தியா தனது ஆண் நண்பர்கள் மூலம் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார்.மேலும் அவரது நடவடிக்கைகளும் முற்றிலும் மாறியது. அதுமட்டுமின்றி பல ஆண்களுடன் தகாத உறவு கொண்டு,இரவு நேரத்திலும் வெளியே செல்ல முயன்றார். 

அதனை போல கடந்த 19-ந் தேதி இரவு வெளியே செல்ல சந்தியா தயாரான போது அவரை நான் தடுத்தேன். அதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது ஆத்திரமடைந்த நான் சுத்தியால் சந்தியாவின் தலையில் ஓங்கி அடித்தேன். அதில் அவர் இறந்துவிட்டார்.

பின்னர் அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி, அதனை 4 கோணிப்பையில் போட்டேன். இடுப்பு முதல் தொடை வரையில் அடங்கிய பையை பாலத்தின் அடியிலும், தலை, உடல் பாகங்கள் கொண்ட 2 பைகளை ஜாபர்கான்பேட்டையில் உள்ள வெவ்வேறு குப்பை தொட்டிகளிலும், 2 கால், ஒரு கை கொண்ட பார்சலை கோடம்பாக்கம் குப்பை தொட்டியிலும் போட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed wife for illegal affairs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->