மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


சென்னை புளியந்தோப்பு திருவிக நகரை சேர்ந்தவர் துக்காராம். இவரது மனைவி தாராபாய். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த துக்காராமின் மூத்த மகன் சஞ்சய் ராம், தனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவரது அம்மாவை தேடியபோது அவரும் வீட்டினுள்ளே தலை நசுங்கிய படி இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு சஞ்சய்ராம் அலறியுள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

துக்காராமிற்கு அவரது மனைவி தாராபாய் அழகாக இருப்பது பிடிக்கவில்லை. மேலும் அவர் தனது மனைவி மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இவர்களது இந்த பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வந்துள்ளது. 

இந்நிலையில் துக்காராம் நள்ளிரவில் கிரைண்டர் கல்லை தாராபாய் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். அதன்பின்னர் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed wife for beuty


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->