மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்!! மனைவியையும், மாமியாரையும் வெட்டிக்கொன்ற கொடூர கணவன்!!
husband killed his wife
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி பழனியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் குடித்துவிட்டு தனது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், தனது மனைவியை ஆசைக்கு இணங்குமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், பழனியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனை தடுக்க சென்ற அவரது மாமியாரையும் அவர் வெட்டி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீசாரிடம் மணிகண்டன் கூறுகையில், வேறு நபருடன் தொடர்பு இருப்பதால் என்னிடம் வெறுப்பு காட்டுகிறார் எனது மனைவி. அதனால் தான் பழனியம்மாள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு பழனியம்மாளை உல்லாசமாக இருக்க அழைத்தேன். ஆனால் அவர் வழக்கம்போல மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான், அரிவாளால் பழனியம்மாளை வெட்டினேன். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து என்னிடம் தகராறு செய்த மாமியார் முத்தம்மாளையும் வெட்டினேன். சிறிதுநேரத்தில் 2 பேரும் உயிர் இழந்து விட்டனர் என கூறியுள்ளார்.