மனைவிக்கு பக்கத்துவீட்டு இளைஞனுடன் ஏற்பட்ட வாட்ஸ் ஆப் கனெக்சன்!. அதை பார்த்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!. - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ், இவரது மனைவி சுலோக்சனா இருவரும் அவர்களின் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தனர்.

சுலோக்சனா, தனது குழந்தைகளுக்கு தேவையான பள்ளி புராஜெக்ட் பொருட்களை வாங்கிவருவதற்கு பக்கத்துவீட்டு நபரான ஜெயசிங் என்பவரிடம் கூறியுள்ளார். அந்த பொருட்களை வாங்கி கொடுத்தபின்பு ஜெயசிங்குடன் சுலோக்சனாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும்  தனிமையில் இருந்ததாகவும், அதனை வீட்டுக்கு வந்த சுலோக்சனாவின் கணவர் ராஜ் பார்த்து சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகு இருவரும் வாட்ஸ் ஆப் மூலம் பேசி வந்துள்ளனர்.

மனைவியின் நடவடிக்கைகளை நோட்டமிட்டு சந்தேகித்த ராஜ், மனைவியின் செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்புவது யார் என்று பார்த்துள்ளார். அந்த நபர் பக்கத்துவீட்டில் வசிக்கும் ஜெயசிங் என்பதையும் கண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து, ஜெயசிங் வீட்டிற்கு சென்று ராஜ் அவரிடம் சண்டை போட்டு அவரை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சிங், தனது உறவினர் மற்றும் நண்பர்கள் துணையுடன் நள்ளிரவில் ராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed by neighbours for wife wrong relation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->