கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கைலாசத்திற்கு அனுப்பிய மனைவி.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் வெள்ளையூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் கட்டிட தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில், சின்னசாமி கடந்த 15ஆம் தேதி நியாய விலைக் கடையின் முன்பாக எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். 

அப்போது குடும்ப தகராறில் மண்ணெணெய் ஊற்றி சின்னசாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்தனர். 

அவரது மனைவி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், சகுந்தலாவுக்கு அந்தோணி என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இது குறித்து அறிந்த சின்னசாமி தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், கேட்காத மனைவி தங்களுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரித்து உள்ளதாக தெரிகிறது. இது தொடர்ந்து சகுந்தலாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed by his wife in salem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->