மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்..குழந்தைகளின் நிலை என்ன?  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் போளுரை அடுத்துள்ள அலங்காரமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகை சவாரி செய்வதும் விவசாயம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மகளும் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது மகனும் இருக்கின்றனர். 

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சுரேஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இருவருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கணவனிடம் ஏற்பட்ட தகராறில், பச்சையம்மாள் குரால் பாக்கம் கிராமத்தில் உள்ள தனது அத்தை சாவித்திரி வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். 

நேற்று காலை 10 மணி அளவிற்கு குரால் பாக்கம் கிராமத்திற்கு சுரேஷ் சென்று தகராறு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். 

இதனால் அவர், துடிதுடித்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதையடுத்து, சுரேஷ் போளூர் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் கிராமத்திற்குச் சென்று பச்சையம்மாள் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband kill wife near thiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->