உங்க பொண்ணு செத்துட்டா.. இன்னொரு பொண்ணோட லிங்க்.. அதனாலதான் என் பொண்ண.. அதிரவைத்த சம்பவம்...!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஓரகுண்டா பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி என்பவர் இவர் யோகா ஆசிரியராக இருந்து வருகிறார். இவருக்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வாசுகி என்பவரின் மகள் ஜீவித்தவுடன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கருப்பசாமியின் மனைவி ஜீவிதாவும் ஒரு யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பிறகு வேலூரில் உள்ள யோகா மையம் ஒன்றில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். வேலூர் சாய்நாதபுரம் நடேசன் முதலியார் தெருவில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இருவருக்கும் நேற்று முன்தினம் மீண்டும்தகராறு ஏற்பட்டுள்ளது. ஜீவிதா கணவருடன் ஏற்பட்ட சண்டையை தனது தாய்க்கு போனில் கூறியுள்ளார்.

Image result for suicide seithipunal

அதன் பின்னர் கருப்புசாமி ஜீவிதாவின் தாயை போனில் தொடர்பு கொண்டு, உங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வாசுகி உறவினர்களுடன் வேலூருக்கு வந்த அவர் தனது மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று அவரது மருமகன் கருப்புசாமி மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கருப்பசாமிக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இடையே தொடர்பு இருப்பதால் எனது மகளை இவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பெயரில் புகார் அளிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்து குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband kill his wife theni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->