பாய்பிரண்டுடன் பழக்கம்.. கண்டித்த கணவன்.. ஆத்திரத்தில் செய்த காரியம்.!
husband kill his wife for relationship with her boy friend
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண் நண்பருடனான பழக்கத்தை கைவிட மறுத்த மனைவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்தார்கள்.
மதுரை, நெடுங்குளம் வலசை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை பிரியன். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அபிநயா என்னும் பெண்ணை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். பிறகு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி இருவரும் வாழ்ந்து வந்தார்கள்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது, இந்த நிலையில் மனைவி அபிநயா அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு ஆண் நண்பருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து வந்ததால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்றும் கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது.
அப்போது நிதானம் இழந்த கணவன் வெள்ளை பிரியன் மனைவி அபிநயாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து உடலை அருகில் உள்ள கிணற்று குழியில் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். விசாரணை நடத்திய அலங்காநல்லூர் போலீசார் தப்பி ஓடிய கணவன் வெள்ளைபிரியனை கைது செய்தார்கள்.
English Summary
husband kill his wife for relationship with her boy friend