குடிக்க பணம் தராத மனைவி.. குடும்பத்தினரை பழிவாங்க கணவன் செய்த வேலை.! 3 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் பெண்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சம்பளகாடு கிராமத்தில் குமார், பழனியம்மாள் என்ற தம்பதியினர், குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். கணவர் குமார் மதுப்பழக்கத்தால் வேலைக்கு செல்லாததால் பழனியம்மாள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். 

இந்நிலையில், குமார் தினமும் மது குடிக்க பணம் கேட்டு பழனியம்மாளை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பழனியம்மாள் சம்பாதிக்கும் பணத்தை குமார் பிடிங்கி சென்று மது குடித்து வந்துள்ளார். குமார் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். பழனியம்மாள் பணம் இல்லை என கூறிய நிலையில், இந்த வீட்டில் நீங்கள் எப்படி குடியிருப்பீர்கள் பார்க்கிறேன் எனக் கூறி குடிசைக்கு தீ வைத்தார். 

இதனால், வீட்டில் இருந்த பழனியம்மாளும், 3 மகன்களும் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் வீடு முழுமையாக எரிந்து சாம்பலானது. வீட்டிலிருந்த ஆடைகள், அரிசி, ரேஷன் கார்டுகள், ஆதார் கார்டு, குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் என அனைத்து பொட்களும் எரிந்து தீயில் கருகியது. இது குறித்து பழனியம்மாள் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் முறையிட்டார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், சொந்த வீட்டுக்கு தீ வைத்த குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband fire to own house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->