மதுபோதை... கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்.. பலியான கணவன்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் இருக்கும் உசிலம்பட்டி அருகே தம்பதிகள் விஷம் குடித்ததில் கணவர் உயிரிழந்துள்ளார். பெருமாள் பட்டியை சேர்ந்த ராமர் என்பவர் அடிக்கடி குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்து அவருடைய மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

இதுபோலவே, நேற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமிடம் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதம் முற்றியது. இதன் காரணமாக பாக்கியலட்சுமி பயிருக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார்.

அதை பார்த்த ராமர் அதையே தானும் குடித்து விட இருவரும் உயிருக்கு போராடி உள்ளனர். .இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் உடனே உயிரிழந்துவிட்டார். பாக்கியலட்சுமி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband fight with wife in drunken


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->