திருமணமாகி 4 மாதமாக வீட்டுக்கு வராத கணவனை தேடி சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அடுத்த சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த சிவநேசன் என்பவர், ஈரோடு மாவட்ட பெருந்துறை அருகே தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் துணைமேலாளராக பணி புரிந்து வருகிறார்.

சிவநேசனுக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கமணி என்னும் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இருவரும் உறவினர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் கடந்த 7 வருடங்களாக குடும்பம் நடத்திவந்துள்ளார. இவர்கள் இருவருக்கும் 5 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிவநேசன் தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறிய சென்றார். சொந்த ஊருக்கு சென்ற அவர் தனக்கு திருமணம் செய்துவைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதன் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிருந்தாதேவி என்னும் பெண்ணை சிவனேசனுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

பிருந்தாதேவியை திருமணமானம் செய்து கொண்ட ஒரே வாரத்தில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சிவனேசன் சென்றுள்ளார். அதன் பின்னர் பல மாதங்கள் ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனிடையே மனைவி சிவநேசனுக்கு போன் செய்து தன்னை எப்போது கூட்டி கொண்டு செல்விர்கள் என்று கேட்டதற்கு சரியான பதில் வரவில்லை.  

இதனால் சந்தேகமடைந்த பிருந்தாதேவி சிவநேசன் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று விசாரித்ததில் அவருக்கு தங்கமணி என்ற மனைவியும், 5 வயதில் குழந்தை இருப்பதையும் கேள்வி பட்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து, பிருந்தாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிவநேசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband escaped from 2nd wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->