கணவர் தற்கொலை.. ஒரே வாரத்தில் பிள்ளைகள் கண்முன்பே இப்படியா செய்வது.?!  - Seithipunal
Seithipunal


சென்னை போரூரை அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு சண்முகம் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவருடைய காரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.

அப்பொழுது அவர்கள் வீட்டில் இருந்துவிட்டு கணவனை இழந்து தவிக்கும் ராஜேஸ்வரிக்கும், மகள்களுக்கும் ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். கணவர் இறந்த துக்கத்தில் ராஜேஸ்வரியும் அவருடைய மகளும் தனித்து இருந்துள்ளனர்.

Image result for suicide seithipunal

ராஜேஸ்வரி தன்னுடைய கணவரை இழந்த சோகத்தை தாங்க முடியாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். அதன்பின்னர் மகள்கள் இருவரும் தூங்கி விட்டனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது ராஜேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு இரண்டு சிறுமிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தாயின் உடலை பார்த்து கதறி அழுதனர். கணவன் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் மனைவியும் இரு மகள்களை அனாதையாக விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband death wife suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->