கணவர் இறந்த சோகத்தில் தாய், மகன் எடுத்த விபரீத முடிவு...சோகத்தில் ஊர் மக்கள்..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது மனைவி சுபா, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணம் ஆகிய நிலையில், மகன் படித்து முடித்து வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சிதம்பரம் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் சுபாவும் அவரது மகனும், சிதம்பரத்தின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பிறகு அருகில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்க்கும் போது,  இருவரும் கீழே விழுந்து  கிடந்ததை கண்டு சாத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய், மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித்தனியே கடிதம் எழுதியுள்ளனர். 

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாய், மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband death mother and son sucide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->