கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற மனைவி.! கணவர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் மில்கிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாஸ்கர் பாபு(34). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த பாஸ்கர் பாபு, வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து பாஸ்கர் பாபுவின் வீடு கடந்து 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பாஸ்கர்பாபுவின் தங்கைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது பாஸ்கர் பாபு தற்கொலை செய்து பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்த வந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் பாஸ்கர் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband commits suicide in virudhunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->