மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனவேதனை அடைந்த கணவர் தற்கொலை - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனவேதனை அடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் செங்கோடம்பாளையம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் குமார் (39). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதால் குமார் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband commits suicide by hanging in erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->