தினம் சண்டை , மனைவியை கொன்றுவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு..!
Husband commits suicide after killing wife
குடும்ப தகராற்றால் மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் , அடஞ்சேரி கிராமத்தில் சேர்ந்தவர் லாட முருகன். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவர் அந்த பகுதியில் கடன் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார்.
கணவன், மனைவிக்கிடையில் மனஸ்தாபம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம் போல கணவன் மனைவிக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கிரைண்டர் கல்லால் மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband commits suicide after killing wife