முகநூல் காதலியுடன் தனிவீட்டில் குஷி.! பற்றவைத்த மனைவி, பதறிப்போன வாலிபர்.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் வெள்ளிக்கோடு பகுதியில் ரூபஸ் ஜெரால்டு என்பவர் தேவகுமாரி என்ற பெண்ணை 15 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். வரதட்சணை தகராறு வரக்கூடாது என 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், 101 சவரன் நகையும் பெண்வீட்டார் தரப்பில் கொடுத்து இருக்கின்றனர்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இருக்கின்றனர். இந்நிலையில் ரூபஸ் ஜெரால்டுக்கு முகநூலில் தோழி ஒருவர் கிடைத்துள்ளார். அன்றாடம் பல மணி நேரம் முகநூலில் சாட்டிங் செய்து அந்த பெண்ணை ரூபஸ் காதல் வலையில் வீழ்த்தி இருக்கின்றார். மனைவியின் நகை மற்றும் பணத்தை எடுத்து மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 22 வயதான முகநூல் காதலிக்கு செலவழித்துள்ளார். 

பின்னர் கேரளாவிற்கு சுற்றுலா சென்று வந்துள்ள அந்த ஜோடியின் விவகாரம் தேவகுமாரிக்கு தெரிந்து சண்டையிட்டு இருக்கின்றார். இதனால் அவரை அடித்து சண்டையிட்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு விரட்டியடித்துள்ளார். பின்னர் தங்கள் வீட்டிற்கே காதலியை அழித்து வந்து பொழுதைக் கழித்துள்ளார் ரூபஸ்.

இது மனைவிக்கு தெரியவர பெரியவர்களுடன் வைத்து சமாதானம் பேசி மனைவியுடன் சேர்த்து வைத்துள்ளனர். அதன்பின்னர், ரூபஸ் தனது காதலிக்கு தனிவீடு எடுத்து கொடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். விபரம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த தேவகுமாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ரூபஸ் 20 பேர் கொண்ட கூலிப்படையுடன் சேர்ந்து தேவகுமாரியை கொலை செய்ய வீட்டிற்கு செல்ல அங்கே அவர் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கின்றது. ரூபஸையும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband cheating wife in kanyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->