உறவினருடன் செல்பி எடுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..!
Husband attempt kills his wife
உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் எர்வர்ட் ஜான். இவருக்கு திருமணமாகி கிரேஸ் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். ஜானுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி தனது சகோதரரின் திருமணத்திற்கு சென்ற கிரேஸ் அவரது உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார்.
இதனைப் பார்த்த ஜான் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் தங்கை வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த ஜான் செல்பி எடுத்தது குறித்து மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கிரேஸ் தனது தாய்க்கு செல்போன் தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த அவரது தாயார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து, அவருடைய தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Husband attempt kills his wife