குடும்பத் தகராறில் மனைவியை கொல்ல முயன்ற கணவர்.! அரியலூர் அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா (34). இவரது மனைவி ஜெயப்பிரியா(26). இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரிடையே தகராறு முக்கிய நிலையில் ஆத்திரம் அடைந்த ராஜா, வீட்டிலிருந்த சிறிய தாம்பூல தட்டை எடுத்து ஜெயப்பிரியா மீது வீசியுள்ளார். இதனால் ஜெயப்பிரியாவின் கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்டு காயமடைந்தார்.

இதைத்தொடர்ந்து காயம் அடைந்த ஜெயப்பிரியா சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஜெயா பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் போலீசார் ஜெயப்பிரியாவை கொலை செய்ய முயன்றதாக ராஜாவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for trying to kill wife for family problem in Ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->