மது போதையில் மனைவியை குத்தி கொலை., கணவன் கைது..!! - Seithipunal
Seithipunal


மனைவியை மது போதையில்  கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், புதுபேட்டை பகுதியில் வசித்து வருபவர் கலில். இவருக்கு திருமணமாகி  ஜெரினா என்ற மனைவி உள்ளார். கலில் மதுவுக்கு அடிமையானதால் ஜெரினா அந்த பகுதியில் மீன் ந்வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

மது அருந்திவிட்டு வந்து கலில் மனைவியுடன் தினம் தகராற்றில் ஈடுபடுவார் என தெரிகிறது. இந்நிலையில், சம்பவதன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்ப்படுள்ளது.

இதனால், மது போதையில் மனைவியை வீட்டில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெனிரா உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஜெனிராவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கலிலை கைது செய்தனர். மது போதையில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for killing wife under the influence of alcohol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->