#மதுரை || வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை.. கணவன் மாமியாருக்கு 7 ஆண்டுகள் சிறை..!
Husband and Mother in law jailed For 7 years
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் மாமியருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மதுரை சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு திருமணமாகி பிரீத்தா என்ற மனைவியும் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், வரதட்சணை கேட்டு பிரீத்தாவை கொடுமைபடுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களின் கொடுமை தாங்காமல் கடந்த 2011ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ராஜசேகர் மற்றும் அவரது தாயாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் இந்த வழக்கு விசாரணை மதுரை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையின் போது பிரீத்தாவை தற்கொலைக்கு தூண்டியது உறுதியானது.
இதனை அடுத்து, இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், ராஜசேகருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும், தாயார் சகுந்தலாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்பளித்தார்.
English Summary
Husband and Mother in law jailed For 7 years