"சரக்கு மிடுக்கு கும்பல்" - வெளுத்து வாங்கும், முக்கிய புள்ளி.!
h.raja tweet about dmk coalition
வருகிற 21ம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைதேர்தல் நடக்க இருக்கின்றது. நேற்று மாலையுடன் அதற்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என ஒவ்வொரு கட்சியில் தீவிரமாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து சேகரித்தது. இந்த இடைத்தேர்தல் அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றது.
எனவே, அதிமுக திமுக இடையே பலத்த போட்டியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் இன்று காலை தமிழக பாஜக தேசிய செயலாளர், எச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில், "பகவத்கீதையையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் இழிவாக பேசிய திக, திமுக, காங்கிரஸ் கும்பலுக்கும், தனது சரக்கு மிடுக்குப் பேச்சால் அனைத்து சமுதாயத்தினரையும் இழிவு படுத்திய திருமாவளவனுடன் கூட்டணி கொண்டவர்கள் தமிழக அரசியல் களத்தில் இருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து. புரிந்து செயல்படுவோம்." என தெரிவித்துள்ளார்.
English Summary
h.raja tweet about dmk coalition