கருணாநிதியின் பழசை கிளறும் எச்,ராஜா.!! இந்த கூத்தெல்லாம் வேற நடந்திருக்கா.?!  - Seithipunal
Seithipunal


மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள், செய்தியாளர்களிடம்," ஹேரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் கர்நாடக கட்டியதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என 1970இல் கருணாநிதி சட்டமன்றத்திலேயே கூறினார்.

தமிழகத்திற்கு இதை விட ஒரு பெரிய பாவச்செயல் இருக்கின்றதா? சென்னைக்கு புண்ணியம் செய்த ஏரிகளை அழித்து வள்ளுவர் கோட்டம் கட்டியது திமுக கருணாநிதி. திக, திமுக இருக்கும் வரை தமிழகத்திற்கு எந்த ஒரு நல்லது நடக்காது. இதற்கு எடுத்துக்காட்டு தான் திமுக பொருளாளர் கூறியிருக்கும் வார்த்தைகள்.

Image result for duraimurugan seithipunal

"ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும்" என கூறுகிறார். உள்ளூரில் இருக்கும் சக தமிழருக்கே தண்ணீர் தர மறுக்கும் இவர்கள், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போகிறார்களா? இப்படி எல்லாம் செய்தால் எங்கிருந்து தண்ணீர் பெற முடியும்?

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க, தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதவி வெறிக்காக கட்சி மாறியவர். அவர் செல்லாத கட்சியே இல்லை.தி.மு.க.,வை துடைத்தெறிய, மக்கள் தயாராக வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h.raja says about dmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->