சுவையான சோயா பட்டாணி புலாவ்.! செய்வது எப்படி.!
how to prepare soya pattani pulav
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,
சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,
பிரியாணி இலை - ஒன்று,
ஜாதிபத்திரி - சிறிய துண்டு,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
சோயா உருண்டைகளை 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் போட்டு சுமார் 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடிகட்டவும்.
பாசுமதி அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்த பின்னர், பட்டை, ஏலக்காய், கிராம்பு, ஜாதிபத்திரி, பிரியாணி இலை ஆகியவை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வதங்கிய பின்னர், இஞ்சி - பூண்டு விழுதை அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழையுமாறு, வதக்கவும்.
பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பச்சைப் பட்டாணி மற்றும் சோயா உருண்டைகள், கொத்தமல்லி, அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி மூன்று விசில் விட்டு பின்னர் இறக்கவும்.
சுவையான சோயா பட்டாணி புலாவ் தயார்.!
English Summary
how to prepare soya pattani pulav