உலகை அச்சுறுத்தி வரும் கரோனா.. தப்பிக்க என்ன செய்யலாம்?..!! தமிழ் மருத்துவம்.!!
how to avoid corona virus by tamil medicine
சீன நாட்டில் உள்ள உஹான் பகுதியில் கரோனோ என்ற புதியவகை வைரஸ் பரவியிருப்பது அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டு வருவதால், இந்த வைரசால் தற்போது வரை சீனாவில் 259 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைப்போன்று அங்குள்ள உஹான், பீஜிங், ஷாங்காய், ஸெனான், தியான்ஜின் மற்றும் ஜேஜியாங் போன்ற பகுதியிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்கா, தைவான், ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளுக்கு பரவியுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸிலின் தாக்கத்தால் சுவாசக்கோளாறு பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
மேலும், கரோனோ வைரஸிற்கு தற்போது வரை சுமார் 259 பேர் பலியாகியுள்ளதாகவும், 11,791 பேர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவை சார்ந்த மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகளை சார்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் மருந்துகளை கண்டறிந்து வருகின்றனர். மேலும், இதற்கான தடுப்பூசி கண்டறிய ஆறு மாத காலம் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் இந்தியாவை பொறுத்த வரையில் நமது உணவு முறைகளை வைத்தே பல நோயில் இருந்து தப்பித்து வரும் நிலையில், தமிழர்களின் மருத்துவ அறிவியலுக்கு ஆதாரங்கள் வேண்டுமென்றால் இல்லாமல் போயிருக்கலாமே தவிர, அவர்களின் மருத்துவ குறிப்புக்கள் சமையலில் மறைமுகமாக கலக்கப்பட்டுள்ளது.
நமது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரலளவு இஞ்சியை வெந்நீரில் போட்டோ அல்லது தேநீரில் போட்டோ கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனை நாளொன்றுக்கு இரண்டு வேலைகள் குடிக்கலாம். பச்சையான காய்கறிகள், அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
இதனைப்போன்று வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். கொய்யாப்பழம், ஆரஞ்சு பழம், நெல்லிக்காய் போன்றவற்றையும் சாப்பிடலாம். மேலும், சாம்பார் மற்றும் ரசம் போன்ற உணவு பொருட்களில் மஞ்சளை சிலர் வழக்கமாக சேர்ப்பார்கள். மஞ்சளை சேர்க்காத நபர்கள் சிறிய கரண்டியில் ஒரு கரண்டியளவு மஞ்சள் சேர்த்து கொள்ளலாம்.
இதன் மூலமாக நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். மேலும், வைரஸ் பரவும் காலங்களில் இதனை சாப்பிடுவதன் மூலமாக நமது உடல்நலம் பாதுகாக்கப்படும். நிலவேம்பு கஷாயத்தை மறக்க வேண்டாம்.. தகுந்த நேரத்தில் நமக்கு உதவி செய்தது நினைவில் இருக்கட்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
how to avoid corona virus by tamil medicine