கோவையில் 2 மாடி கட்டிடம் இடிந்து விபத்து! 'பறிபோன உயிர்கள்' மீட்பு பணிகள் தீவிரம்! - Seithipunal
Seithipunal


கோவை பேரூர் செட்டி வீதியில் வனஜா என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் பக்கத்தில் இருந்த ஓட்டு வீடுகளும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து  சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் உள்பட 6 பேரை காயங்களுடன் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதே சமயம் இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஸ்வேதா என்ற 27 வயது பெண், கோபால்சாமி என்ற 70 வயது முதியவர் என இருவர் உயிரிழந்தனர். தீயணைப்பு துறை, மருத்துவ குழு மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

house building accident two members died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->