ஓசூர் அருகே கொடூர விபத்து! பற்றி எறிந்த பேருந்து! பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட இருவர் தீயில் கருகி பலியாகியா கொடூர சமத்துவம் அரங்கேயுள்ளது.

இருசக்கர வாகனம் மீது மோதிய கர்நாடக அரசு பேருந்தும் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் அடுத்த ஒட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன்(வயது 45). ராணுவ வீரரான இவரும், அதேப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 35) என்பவரும் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளனர்.

சிக்காரி மேடு அருகே சென்று இவர்களின் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்த போது, பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்து, இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி. விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இராணுவ வீரர் உள்ளிட்ட இருவரும் பலியாகினர்

பேருத்தின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனம் சிக்கி தீப்பற்றி எரிந்ததால், பேருந்து தீக்கரையானது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அனைத்தனர். இந்த கொடூர விபத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hosur Near Bike Bus Accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->