#Breaking: ஓசூர்: முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவன கொள்ளை வழக்கு... 6 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது.!
Hosur Muthoot Finance Robbery Case Culprit Arrest in Hyderabad
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் - பாகலூர் சாலையில், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று காலை ஊழியர்கள் வழக்கம்போல தங்களின் பணியை தொடங்கிய நிலையில், திடீரென உள்ளே நுழைந்த மர்ம கும்பல் துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளது.
சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 10 தனிப்படைகள் அமைத்து கொள்ளைக்கும்பலை தேடி வந்தனர்.
மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை தொடங்கிய நிலையில், மோப்ப நாயும் அலுவலகத்தில் இருந்து ஓசூர் வரை சென்றது. இதனையடுத்து 2 தனிப்படை காவல் துறையினர் நேற்றே ஓசூர் விரைந்து இருந்தனர்.
இந்நிலையில், ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தில் பைகளில் தங்க நகைகளை நிரப்பிக்கொண்டு சென்ற நிலையில், ஹைதராபாத்தில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Hosur Muthoot Finance Robbery Case Culprit Arrest in Hyderabad